Thursday 27 October 2011

நான் நானாக.........

(மித்திரன் வாரமலரில் நான் எழுதிய "ரசிக்கலாம் வாங்க" தொடரிற்காக எழுதியது... 29-05-2005 இல் பிரசுரமானது) 

ஒரு நண்பர் இருந்தார்... அவரிடம் எனக்கு மிகப்பிடித்த விடயம் அவர் உலகை பற்றிக் கவலைப்படாதது தான். அதாவது மற்றவர்கள் தன்னைப்பற்றி என்ன நினைப்பார்களோ என்ற எண்ணம் ஒரு துளியேனும் அவரிடம் இருந்ததில்லை. தனக்கு பிடித்த விதத்தில் ஆடைகள் அணிவார். பல சமயங்களில் அது வித்தியாசமான கோணத்தில் இருக்கும். அவரைக் கடந்து போகின்றவர்கள் நிச்சயமாக ஒருதடவை மேலிருந்து கீழ் வரை பார்த்துவிட்டு போவார்கள். விதவிதமாய் சிகை அலங்காரம் செய்வார். வகை வகையாய் ஆபரணங்கள் அணிவார். தனக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அத்தனையும் செய்வார். அதற்கான விளக்கங்கள் நமக்கு புரியாது. நமக்கு புரியவைக்க அவர் முயல்வதும் கிடையாது. நினைத்ததை எல்லாம் சென்சார் இன்றிப் பேசுவார். சபையோர் எவராக எத்தரப்பினராக இருப்பினும் அவரது பேச்சு இடத்துகேற்ப மாறுவதில்லை. .....       மொத்தத்தில் அவர் அவராகவே இருந்தார்!

Wednesday 29 June 2011

ஒரு அஞ்சலி.... சில பாடங்கள்...

பிரபலம் என்னும் சொல்லுக்கு மிகச்சிறந்த உதாரணம் மைகேல் ஜாக்சன் என்னும் பெயர் தான்.. உலகம் முழுக்க எத்தனையோ கலைஞர்கள் வந்து போனால் கூட பட்டி தொட்டியெல்லாம் தெரிந்த ஒரே பெயர் இந்த மைகேல் ஜாக்சன். அவரது பாடலை கேட்காத அவரது நடனத்தை பார்த்திராத பல்லுப்போன ஒரு பாட்டிக்கு கூட அவரின் பெயர் நிச்சயம் தெரிந்திருக்கும். அப்படியானதொரு பிரபலம் வேறு யாருக்கு இருக்கின்றது?

கலைஞர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.  பதிவு செய்யப்பட அவர்களின் படைப்புகள் இறவாத்தன்மை பெற்றுவிடுகின்றன. மலேசியா வாசுதேவன் இன்னும் பாடிகொண்டிருகின்றார்....கவிஞர் கண்ணதாசன் இன்னமும் கருடா சௌக்கியமா என்று நலம் விசாரித்துக் கொண்டிருக்கின்றார்.... மொத்தத்தில் நல்ல கலைஞருக்கு சாவில்லை..

Wednesday 27 April 2011

கூவி விற்கவும் தெரியணும்



"நீங்கள் உற்பத்தி செய்பவற்றை நீங்களே விற்பனை செய்ய முடிந்தாலன்றி தற்கால நவீன வியாபார உலகத்தில் தனித்தன்மையுள்ள சிந்தனையாளராக  இருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை" -டேவிட் .எம். ஓகில்வி 


இன்றுவரை எங்கள் படைப்புகளுக்கு களமில்லை, நல்ல காலமுமில்லை, விலை போகுதுமில்லை என்று குறை பட்டுக்கொள்ளும் நிறைய கலைஞர்களைப்  பார்கின்றேன். ஊடகங்களில் எமது படைப்புகள் ஒலிபரப்ப படுவதுமில்லை என்பது இன்னுமொரு பிரபலமான குற்றச்சாட்டு.

பல நேர்காணல்களில் இது பற்றி நான் கதைத்ததுண்டு.  சக கலைஞர்கள் மனம் நொந்து போடும் status message களுக்கு  நான் கமெண்ட் ஆகவும்  பதிந்த்துண்டு.

Wednesday 20 April 2011

இசையமைக்கும் தொழிலில் பெண்கள் ??


இசையமைப்பாளராக பெண் ஒருவரை காண்பது மிக அரிதான விடயமாகவே இருப்பதன் ரகசியம் என்னவென்று புரியவில்லை. ஒருவரும் இல்லையென்றும் சொல்லிவிட முடியா அதே வேளை, பிரகாசிக்கும் வெற்றிகரமான பெண் இசையமைப்பாளர் ஒருவருமே இல்லை என்பதை கொஞ்சம் திடமாக சொல்லிக்கொள்ள முடியும் என்று நினைக்கின்றேன்.

"Why No Great Women Composers?" என்பது 1940 இல் உளவியலாளர் கார்ல்.எ.செஷோர் எழுதிய புத்தகம். சாதிப்பதை விட சாதிப்பதற்கு ஆண்களுக்கு துணை போதலே பெண்களுக்கு மன மகிழ்ச்சி தருகிறது என்னும் பொதுவான ஒரு உளவியல் காரணமே மற்ற துறைகளை போல இசையமைததலில் பெண்கள் ஆர்வம் காட்டாமைக்கு காரணம் என்று அவர் குறிப்பிடுகின்றார். அவரது காலத்துக்கு அது ஒரு வேளை சரியான ஒரு கூற்றாக இருக்கலாம். அனால் இன்றைய கால கட்டத்தில் இது ஏற்றுக்கொள்ளப்பட முடியாத கருத்து என்பதற்கு நான் விளக்கம் சொல்ல தேவையே இல்லை.