Thursday 19 January 2012

தகவல்கள் ஜாக்கிரதை!

ஊடகங்களில்  முதன்மையானதாக இணையம்  மாறி விட்டது.. பார்த்தல் கேட்டல் படித்தல் ஒளி ஒலி என்று என்னென வடிவங்களில் மக்களை சென்றடைய வேண்டுமோ அந்த அந்த வடிவில் இலகுவில் மக்களுக்கு செய்தி கொண்டு சேர்ப்பது இணையத்துக்கே உரிய தனித்துவம்..

இந்த தனித்துவமும இதன் மூலமான கருத்து சுதந்திரமும் கொஞ்சம் அளவுக்கதிகமாகி தறிகெட்டுப்  போய்கொண்டிருக்கின்தோ என்ற அச்சம் மேலெழுகின்றது . யார் வேண்டுமானாலும் செய்தி சொல்லலாம்.. தத்தம் கருத்துகளுக்கும் எண்ன ஓட்டங்களுக்கு ஏற்ப செய்திகளை திரித்துக் கூறலாம் என்ற  ஒரு அபாயகரமான நிலை உருவாகி வருகின்றது.