24-01-2014 அன்று Metro News பத்திரிகையில் பிரசுரமான எனது கட்டுரை
பாடல்கள் கேட்பது பலருக்குப் பொழுதுபோக்கு, என் போன்றவர்களுக்கு அது தொழிலின் ஒரு அங்கம் என்று கூறலாம். அப்படியிருக்கையில் நான் ரசித்த பாடல் என்று ஒரே ஒரு பாடலை நினைவுக்குக்கொண்டு வருதல் போன்ற கடினமான விடயம் வேறில்லை. இருப்பினும் கண்ணை மூடி சிந்தித்த ஒரு கணத்தில் மனதில் உடனே தோன்றிய மிகப்பிடித்த பாடல்வரிசையில் ஒன்று 'அடி ராக்கம்மா கையத்தட்டு...'